தமிழ்நாடு

ராணிப்பேட்டை: காதல் கணவரின் மரணத்தில் மர்மம்: சொத்து பிரச்னை காரணமா? - மனைவி புகார்

Sinekadhara

ராணிப்பேட்டையில் காதல் கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில், சடலத்தை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த மல்லிகா, விஜயலிங்கத்தின் திருமணத்தை விஜயலிங்கத்தின் தாயார் ஏற்காத நிலையில், தாய் - மகனுக்குள் சொத்து பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரச்னையை சுமூகமாக பேசி தீர்க்க முயன்றுவந்த விஜயலிங்கம், கடந்த 22ஆம் தேதி திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடலை உறவினர்கள் அவசர அவசரமாக அடக்கம் செய்துள்ளனர். கணவரின் இறப்பு குறித்து கேள்வி எழுப்பிய மனைவி மல்லிகாவையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மல்லிகா புகார் அளித்ததன் பேரில், விஜயலிங்கத்தின் உடலை தோண்டி எடுத்த காவல்துறையினர் உடற் கூராய்வுக்கு ஒப்படைத்தனர்.