மழை PT web
தமிழ்நாடு

மக்களே உஷார்! 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.. சென்னைக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட்!

Rishan Vengai

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, நாமக்கல், அரியலூர், திருச்சி, கரூர், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 16-ம் தேதிஅன்று ரெட் அலர்ட்..

வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் 20-ம் தேதிகளில் தொடங்கும் நிலையில், இம்முறை 5 நாட்களுக்கு முன்பே தொடங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதிகளில் அக்டோபர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அக்டோபர் 15-ம் தேதி ஆரஞ்சு அலர்ட்டும், அக்டோபர் 16-ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை உடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அக்டோபர் 16ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.