தமிழ்நாடு

ஐஐடியில் அமைதி திரும்ப என்ன நடவடிக்கை?

webteam

மாட்டிறைச்சி விவகாரத்தில் மாணவர்கள் மோதலுக்கு பிறகு ஐஐடி வளாகத்தில் அமைதி திரும்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய, சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் ஐஐடி மாணவர்கள் மணீஷ் - சூரஜ் மோதல் தொடர்பாக சென்னை ஐஐடி மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‌மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஐஐடி வளாகத்தில் நடைபெற்‌ற ‌மாணவர்கள் மோதல் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எ‌ன்றும், தாக்குதலில் ஈடுபட்ட மணிஷை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தி‌ருந்தார்.