தமிழ்நாடு

புளூவேல் பாதிப்பு: மேற்கு வங்க வாலிபர் சென்னையில் மீட்பு

webteam

புளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டு மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்த கல்லூரி மாணவரை ரயில்வே காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவர். இவர் வீட்டுக்குத் தெரியாமல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துள்ளார். இதுகுறித்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகைப்படத்தையும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். 

சென்னை வந்த கோரமண்டல் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை அவர்கள் கண்காணித்தனர். அப்போது அந்தப் புகைப்படத்தை வைத்து அந்த மாணவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் புளுவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார். அவருக்கு அறிவுரை கூறி பத்திரமாக மேற்கு வங்கத்துக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மாணவர் மேற்கு வங்க மாநில அமைச்சர் ஒருவரின் உறவினர் என்று கூறப்படுகிறது.