தமிழ்நாடு

குறைந்து வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்

webteam

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக குடிநீர் மற்றும் பாசனத்திகான நீர்திறப்பு அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.

தற்போது அணையிலிருந்து 1,400 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால் நீர்வரத்து 655 கன அடியாக இருக்கிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கீழிறங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.20 அடியிலிருந்து 125.80 அடியாகக் குறைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை ஓய்ந்த நிலையில் நீர்வரத்தும் குறைந்துள்ளது.