சிலிக்கான் சிலை Twitter
தமிழ்நாடு

விருதுநகர்: ‘இருந்தாலும் பிரிந்தாலும்...’- மறைந்த தன் மனைவிக்கு தத்ரூபமாக சிலை வைத்த கணவர்! #Video

Justindurai S

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ஈஸ்வரி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். அவர்களும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் இவர் கடந்த பல ஆண்டுகளாக தனிமையை அனுபவத்திருக்கிறார்.

சிலிக்கான் சிலை

மனைவியை இழந்து தனிமையில் இருந்த நாராயணன் தன் மனைவியின் நினைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன் மனைவியின் சிலை ஒன்றை செய்து தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

அதன்படி 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தன் மனைவிக்கு தற்போது சிலை வைத்துள்ளார் அவர். நாராயணனின் இச்செயலைக் கண்டு அவரது நண்பர்களும் உறவினர்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். தத்ரூபமாக உள்ள அந்த வீடியோ, காண்போரை வியப்படைய செய்யும் வகையில் உள்ளது!