தமிழ்நாடு

மேல்மருவத்தூர் கோயிலை ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடமாற்றம்!

webteam

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் தனபால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை, அறநிலைய துறைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியாக ஆய்வு செய்ய வேலூர் அற நிலையத் துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். இதற்காக காஞ்சீபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி
தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் இரு தினங்களுக்கு முன் அங்கு ஆய்வு செய்ய சென்றனர். அவர்களை ஊழியர்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. 

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அறநிலையத்துறை அனுமதியில்லாமல், மேல்மருவத்தூரில் ஆய்வு நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.