தமிழ்நாடு

தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்

Rasus

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அகற்றினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் ரயில்நிலையத்திற்கு உட்பட்ட கிடங்கு பகுதிக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதைக் கண்டு அதிருத்தி தெரிவித்தார்.

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிய அமைச்சர், குப்பைகளை சுத்தம் செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், குப்பைகளை அகற்றாத அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.