பவன் கல்யாண் - உதயநிதி ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சனாதன விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பேச்சுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி கொடுத்த பதிலடி!

PT WEB

நேற்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசுகையில், “சனாதனம் ஒரு வைரஸ் போல, அதை ஒழிப்போம் என்று தமிழ்நாட்டில் ஒரு நாயகர் (இளம் தலைவர்) சொல்கிறார். திருப்பதி பெருமாள் முன்னிலையில் சொல்கிறேன், சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவர்” என்று மறைமுகமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சாடியிருந்தார்.

இதுபற்றி இன்று நிருபர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்டபோது, அவர் “Okay, Let's Wait and see” எனக்கூறியுள்ளார். அந்தக் காணொளியை, இங்கே காணலாம்: