தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

PT WEB

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து, ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து 50 பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

அந்தவகையில், தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரன்

செப்டம்பர் 5ஆம் தேதி, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கையால் விருது பெற உள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருதாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் விருதுபெறும் நிலையில், அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாழ்த்து தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தேசிய நல்லாசிரியர் விருதுபெறும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரனுக்கு, சமூக வலைதளம் மூலமும், செல்போனில் தொடர்புகொண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.