கைது செய்யப்பட்டவர்கள் pt web
தமிழ்நாடு

சென்னையில் போதை ஊசியால் 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் - நண்பர் உட்பட இருவர் கைது

PT WEB

சென்னை புளியந்தோப்பு மன்னார்சாமி தெருவைச் சேர்ந்த அமீர் என்பவரின் 17 வயது மகன் போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் தனது நண்பர்களோடு சேர்ந்து, போதை மாத்திரையை கரைத்து, ஊசி மூலம் உடலில் செலுத்தி இருக்கிறார். இதனால் அந்த சிறுவன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், சிறுவனுக்கு போதை ஊசியை வாங்கி கொடுத்ததாக அவரது நண்பர் காசிப் என்பவரையும், போதை ஊசியை விற்பனை செய்த கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வி என்பவரையும், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.