தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா வைரஸ்

webteam

தூத்துக்குடி மாவட்ட திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அமைச்சர்கள் வரை இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதுவரை மொத்தம் 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அத்துடன் கீதா ஜீவனின் மகள் மற்றும் மருமகனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.