தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்! புதிய தலைமுறை
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியருக்கு, பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

PT WEB

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியருக்கு, பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் மு. கண்ணன். அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

து. கண்ணன் என்ற துணை வட்டாட்சியருக்கே வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் தொடர்பில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2018-ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய தூத்துக்குடி ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு ந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவவர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது’ என சில ஊகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பலம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருண் ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள திரு.மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தங் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த திரு து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு அணிக்கப்பட்ட திரு து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இவ்வை.

பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளது” என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.