தமிழ்நாடு

டி.டி.வி.தினகரன் வழக்கு: ஹவாலா பணம் பறிமுதல்

டி.டி.வி.தினகரன் வழக்கு: ஹவாலா பணம் பறிமுதல்

webteam

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹவாலா தரகரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை டெல்லி போலீசார் கடந்த 25ம் தேதி கைது செய்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினகரனையும், அவர் நண்பர் மல்லிகார்ஜுனாவையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னைக்கு அழைத்துவந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அவர்கள் நேற்று மாலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.