தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து பாதிப்பு

Sinekadhara

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் பெய்து வரும் மழையால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் வேலூர் மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திம்மாம்பேட்டை, நாராயணபுரம் பகுதியிலுள்ள கிளை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அம்பலூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை கடந்து தண்ணீர் செல்வதால், போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.