18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் pt web
தமிழ்நாடு

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..

PT WEB

பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • சிபிசிஐடி ஏடிஜியாக ஐபிஎஸ் அதிகாரி அன்பிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

  • தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்க பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம்

  • தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்

  • சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்

  • சென்னை ஆயுதப்படை பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ் குமார் அகர்வாலை நியமனம் செய்து அரசு உத்தரவு. கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார் மகேஷ் குமார் அகர்வால்.

  • சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

  • தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு

  • சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்

  • சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்

  • திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்

  • திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்

  • கடலோர காவல்படை குழுமம் ஏ.டி.ஜி.பி. ஆக சஞ்சய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

  • பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம்

  • காவல் துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

  • சென்னை தலைமைக் காவலக கூடுதல் ஏடிஜிபியாக வினித் தேவ் வான்கடே நியமனம்

  • காவல் துறை நிர்வாகப்பிரிவு கூடுதல் ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்

  • மாநில குற்ற ஆவண காப்பகம் கூடுதல் ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்