தமிழ்நாடு

தீபாவளி காரணமாக வெறிச்சோடியது கொடைக்கானல்

webteam

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

கொடைக்கானலில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்தவாரம் கொடைக்கானல் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. வியாபாரமும் இந்த வாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தீபாவளி நெருங்கி வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்