இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
தமிழ்நாடு

காலை தலைப்புச் செய்திகள் | IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வரை!

PT WEB
  • தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • காவிரிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், டெல்டா விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டுவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.

  • கர்நாடக அரசை கண்டித்து டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு, காவிரி நீரை முறையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

காவிரி
  • மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் தர வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் வலியுறுத்தல்.

  • நில மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, கரூர் அழைத்து வரப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  • சசிகலாவை அதிமுகவில் இணைக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய ஜோசப் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவு பெற்றது.

  • மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து தகராறில் கொலை நடந்தது விசாரணையில் அம்பலமாகிறது.

  • மும்பையில் முறைகேடு புகாரில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஐஏஎஸ் பயிற்சி அகாடமிக்கு அவரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.