குரூப் 4 தேர்வு முகநூல்
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு | காலி பணியிடங்கள் அதிகரிப்பு? விரைவில் வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குரூப் 4 தேர்வில் காலி பணியிடங்களை மேலும் அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் 7.247 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை, 15,80,000 பேர் எழுதினர். அண்மையில் இதற்கான பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன. கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அதன் எண்ணிக்கை 6,724 ஆக உயர்த்தப்பட்டது.

இருப்பினும், குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அதை கருத்தில்கொண்டு அதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.