தமிழ்நாடு

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

jagadeesh

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர், திருத்தம் செய்ய விரும்புவோர் முகாம்களில் அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதியில் 18 வயது பூர்த்தியானவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வருகின்ற 11 மற்றும் 12-ஆம் தேதியும் இதேபோல் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படுகிறது.