தமிழ்நாடு

கொரோனா தடுப்புப்பணி: 2570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் ஆணை

கொரோனா தடுப்புப்பணி: 2570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் ஆணை

webteam

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கெனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள்,1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆர்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து 6மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த செவிலியர்கள் பணி நியமன ஆணைப்பெற்று 3 தினங்களுக்குள் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.

தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப தலா 10 முதல் 30 செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது