தமிழ்நாடு

பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு

webteam

சென்னை, சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தை மூட வேண்டும் என பீட்டா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை, சைதாப்பேட்டையில் 1980 ஆம் ஆண்டு முதல் நாட்டு நாய்கள் இன விருத்தி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 2013 ஆம் ஆண்டு இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாகவும், நாய்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறி மையத்தை மூட வேண்டும் என பீட்டா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தை, இரண்டு மாதங்களில் மூட வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாக, அரசு தரப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.