ஆளுநர் ஒப்புதல் முகநூல்
தமிழ்நாடு

4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!

PT WEB

தமிழ்நாடு சட்டப்பேரவை அண்மையில் கூடிய போது நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவான 'நகர்ப்புற உள்ளாட்சி திருத்த மசோதா'வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், மாநகராட்சியாக உயர்த்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள் தொகை, வருமான அளவுகள் குறைக்கப்படுகின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்

அதேபோல், ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துகள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வது குறித்து சட்டத்திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் சென்னையில், கழிவுநீர் வெளியேற்றும் இணைப்பை கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரிய விதிகளில் செய்யப்பட்ட திருத்தம், சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய மாநகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளளது.