தமிழ்நாடு

படகுகளை மீட்க இலங்கை புறப்பட்டது மீனவர் குழு

படகுகளை மீட்க இலங்கை புறப்பட்டது மீனவர் குழு

Rasus

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 படகுகளை மீட்பதற்காக 53 பேர் கொண்ட மீனவர் குழு இலங்கை புறப்பட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 42 விசைப்படகுகளை விடுவிப்பதாக கடந்த ஜூலை 6-ஆம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 42 விசைப்படகுகளில் 10 படகுகள் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவை. அவற்றில் 7 படகுகள் மட்டுமே தாயகம் கொண்டுவரும் நிலையிலுள்ளன.

இந்நிலையில் முதற்கட்டமாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த படகுகளை மீட்பதற்கான ஒப்புதல் கடிதம் கிடைத்ததால், மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து 53 மீனவர்கள் இலங்கை புறப்பட்டனர். ஊர்காவல்துறை மற்றும் கிராஞ்சி துறைமுகங்களிலுள்ள படகுகளை சரிசெய்து, அவற்றுடன் 2 நாட்களில் மீனவர்கள் ராமநாதபுரம் திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.