தமிழ்நாடு

குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவர்கள்: நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்த சோகம்..!

குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவர்கள்: நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்த சோகம்..!

webteam

செங்கல்பட்டு அருகே குளத்திற்குக் குளிக்கச்சென்ற சிறுவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒரத்தி அருகே உள்ளது வடக்குபுத்தூர் கிராமம். அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு விளையாடலாம் என நேற்று மாலை சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவர்களை காணவில்லை என்பதால் பல இடங்களிலும் அக்கிராமத்தினரும், சிறுவர்களின் பெற்றோர்களும் தேடியுள்ளனர்.

அப்போது குளக்கரையில் சிறுவர்களின் ஆடைகள் இருப்பதை கிராமத்தினர் பார்த்துள்ளனர். பின்னர், உடனடியாக குளத்தில் இறங்கி சிறுவர்களை தேடியுள்ளனர். குளத்திற்குள் 3 சிறுவர்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களின் உடலை மீட்ட கிராமத்தின் இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் விளையாடிய சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.