Hospital pt desk
தமிழ்நாடு

சேலம்: ஏரியில் துணி துவைக்கச் சென்ற அக்கா தம்பி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மேட்டூர் அருகே நங்கவள்ளியில் காவிரி சரபங்க திட்டத்தில் இணைக்கப்பட்ட கொத்திகுட்டை ஏரியில் துணி துவைக்கச் சென்ற அக்கா தம்பி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே வீரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிவலிங்கம். இவருடைய மகள் சிவநந்தினி (18), மகன் சிவாஸ்ரீ (10) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் திவ்யதர்ஷினி (14) ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள காவிரி சரபங்க உபரி நீர் திட்டத்தில் இணைக்கப்பட்ட கொத்திக்குட்டை ஏரிக்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர்.

Hospital

அப்போது சிவநந்தினி துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்த நிலையில், ஆழமான பகுதிக்குச் சென்ற சிவாஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரி நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட சிவநந்தினி, ஏரியில் இறங்கி இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில், சிவநந்தினி நீரில் மூழ்கியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ஏரியில் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முற்பட்டும் முடியாததால் நீண்ட நேரம் போராடி மூன்று பேரையும் சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீசார், 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.