Tragedy pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி: குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து கணவன் எடுத்த விபரீத முடிவு

webteam

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் பீம்சிங் (46) - ஆஷா (34) தம்பதியினர். இவர்களுக்கு ரியான் பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரபாகரனுக்கும், மனைவி ஆஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Tragedy

அப்போது பிரபாகரன் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி ஆஷாவை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தானும் தற்கொலை என்ற விபரீத முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமையிலான போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.