தமிழ்நாடு

திருவாரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை?

webteam

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சோந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். நகைப்பட்டறை தொழிலில் ஈடுபட்டு வந்த குணசேகரன் தனது மனைவி அமுதா, மகள் வித்யாவுடன் இந்திரா காலனியில் வசித்து வந்தார். இந்நிலையில் மூவரும் வீட்டிலிருந்து வெளியே வராத காரணத்தால், அருகில் வசிப்போர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது குணசேகரன் உயிரிழந்த நிலையில் கீழே கிடந்துள்ளார். மேலும் அவரது மனைவி, மகள் தூக்கிட்டு த‌ற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மூவரின் உடலையும் மீட்ட காவல்துறையினர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குணசேகரனுக்கு சிறுநீரகம் இரண்டும் செயலிழந்து, சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்து வந்ததாக தெரிகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு, குணசேகரன் உயிரிழந்திருக்க வேண்டும் என்றும், அதனை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி மற்றும் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.