தமிழ்நாடு

பிரியாணி விருந்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு.! 6 பேரில் ஒருவர் பலி.!

webteam

திருவாரூரில் நடைபெற்ற விழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் கடந்த 5ஆம் தேதி விக்னேஷ் என்பவர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரியாணி மற்றும் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகழ்வில் உணவு சாப்பிட்டவர்களுக்கு உணவு ஒவ்வாமையினால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை கூத்தாநல்லூர் தாலுக்கா வேலுகுடியில் வசிக்கும் விக்னேஷ் உறவினர்கள், உணவு ஒவ்வாமையினால் 7 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று விடியற்காலையில் 24 வயதான செல்வ முருகன் என்ற வாலிபர் உணவு ஒவ்வாமையினால் பலியானார். மேலும் அதே வேளுக்குடி பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் உணவு ஒவ்வாமையினால் விடியற்காலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.