சபாநாயகர் அப்பாவு கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

"திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் போகமாட்டார்" - சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை

webteam

செய்தியாளர்: மனு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளை சந்தித்தார்.

Thirumavalavan

அப்போது அவர் பேசும்போது...

தமிழக முதல்வரின் வெளிநாடு பயணத்தின் மூலம் சுமார் 7,500 கோடிக்கு மேல் முதலீடுகள் வந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்பெறுவார்கள். இந்தப் பயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இது வருங்கால இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

நான் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் எனக்கு சபாநாயகர் பதவியை முதல்வர் வழங்கியுள்ளார் என்று நான் கூறியதாக பாஜகவினர் குறைகூறுகின்றனர். தமிழக கவர்னர் இது ஒரு மதசார்புள்ள நாடுதான் எனக் கூறுகிறார். முதலில் அவர்கள் இதற்கு பதில் கூறட்டும் பிறகு நான் பதில் கூறுகிறேன் என்றவர் தொடர்ந்து....

அதிகாரத்தில் பங்கு என்று திருமாவளவன் பேசுவதை பொறுத்தவரையில் அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். திருமாவளவன் கருத்து குறித்து முதல்வர் தெளிவான விளக்கத்தை கூறிவிட்டார். திருமாவளன் கூட்டணியை விட்டு போவார் என்பது நடக்காது. மதுவிலக்கு கொள்கையை பற்றி 2016 தேர்தல் அறிக்கைகளில் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்" என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.