தமிழ்நாடு

திருமலை திருப்பதியில் கருட சேவை: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

webteam

திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பு  வழிபாடு நடத்தினர். கருட சேவையின்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாடவீதியில் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ நிகழ்வில், நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஊர்வலங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.