உயிரிழந்த தாய் தந்தை  pt desk
தமிழ்நாடு

தேனி | கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு - தாய், தந்தை உயிரிழப்பு.. மகன் சிகிச்சைகாக அனுமதி

கூடலூரில் கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த தாய் தந்தை உயிரிழந்த நிலையில், மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

webteam

செய்தியாளர்: சுரேஷ் குமார்

தேனி மாவட்டம் கூடலூர் ஜக்கன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (44). இவர் கூடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தாய், தந்தையுடன் வசித்து வந்த இவர், இன்று அதிகாலை தனது உறவினரான சிவக்குமார் என்பவரை தொலைபேசியில் அழைத்து எனது தாய் தந்தையர் இறந்து விட்டனர் நானும் விஷம் சாப்பிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மகன்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த தந்தை கணேசன் (70). தாய் கிருஷ்ணம்மாள் (65) ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சிவகுமாரை மீட்ட பொலீசார் அவரை சிகிச்சைக்காக கன்னம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து கூடலூர் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கடந்த 2008 ஆம் ஆண்டு சிவக்குமார் அரசு பணியில் சேர்வதற்காக சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் கடனாக பெற்றுள்ளார். இதற்கு தொடர்ந்து வட்டி கட்டி வந்த நிலையில்,. விவசாயம் செய்வதற்காக மேலும் கடன் வாங்கியுள்ளதாகவும் இதனால், கடன் தொகை சுமார் 4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Police station

தனது சம்பள பணத்திலிருந்து வட்டி கூட கட்ட முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்துள்ளதாக் காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கூடலூர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.