தமிழ்நாடு

சாலையில் நடமாடும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சம்.

webteam

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள 20 யானைகளால் கிராம மக்கள் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 
 
கர்நாடக வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் போடுர் வனப்பகுதிக்கு 20 யானைகள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த யானைகள் உணவு தண்ணீர் தேடி ,கிராமங்களில் நுழையும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டுவது மிகவும் சிரமமான காரியம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் வாழும் கிராம மக்கள் அச்சத்துடன் சாலைகளை கடந்து செல்கின்றனர். இந்த வனப்பகுதியை சுற்றியுள்ள பீர்ஜேப்பள்ளி, சானமாவு, போடுர், ஆழியாளம் போன்ற கிராமங்களில் வசிக்கும்  மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். அதே போல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி எல்லையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோப்புப்பள்ளம் என இடத்தில் நேற்றிரவு மைசூர் தேசிய நெடுஞ்சாலையின்  குறுக்கே சிறுத்தை நடமாடியுள்ளது. இதனை கண்ட அப்பகுதிமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்கும் வரை மக்கள் கவனமாக சாலைகளில் செல்ல வேண்டும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.