தமிழ்நாடு

ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்

webteam

சுடுகாட்டுக்கு செல்ல பாதையில்லாததால், ஆற்றில் நீந்தியபடி உயிரிழந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் அவலநிலை வேலூர் மற்றும் அரியலூரில் ஏற்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம் அணைகட்டு சேர்பாடி கிராமத்தைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள கானாற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மாற்றுப் பாதையும் இல்லாத நிலையில், மார்பளவு தண்ணீரில் நீந்தியபடியே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.

இதேபோல், அரியலூர் மாவட்டம் வக்காரமாரி கிராம காலனியைச் சேர்ந்த மாரியம்மாளின் உடலையும், இரண்டு வாய்க்கால்களை கடந்து சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சுடுகாட்டுக்கு செல்ல பாதை அமைத்துத் தரக் கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மழைக்காலங்களில் இதுபோன்ற அவல நிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.