தமிழ்நாடு

வணக்கம் கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர்

வணக்கம் கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர்

webteam

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடரும் என்று சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையை தொடங்கும் முன்பாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றும், அரசு மீது அளித்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

பின்னர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னர் உரையை தொடர்ந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறிகள் தெரிவதாக குறிப்பிட்டார். முன்னதாக வணக்கம் கூறி தமிழில் உரையை ஆளுநர் தொடங்கினார்.