தமிழ்நாடு

பன்னீர்செல்வம் 4வது முறையாக முதலமைச்சராக வாய்ப்பு : ஸ்டாலின் விமர்சனம்

webteam

பன்னீர்செல்வம், நான்காவது முறையாக முதலமைச்சராக வாய்ப்பு உருவாகியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் பாலைவனமாக மாறிய நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழலில், அது மேலும் மோசமடையும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்குப் பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என தான் கருதுவதாக கூறினார். பன்னீர்செல்வம், நான்காவது முறையாக முதலமைச்சராக வாய்ப்பு உருவாகியிருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.