தமிழ்நாடு

80 ஆயிரத்தை அப்படியே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

webteam

ஆட்டோவில் தவறவிட்ட பையை வீடுதேடிச் சென்று திருப்பிக் கொடுத்த ஆட்டோ ஒட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மதுரை அருகே பறவைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தப் பெண், தான் வைத்திருந்த பையை ஆட்டோவில் தவறவிட்டுள்ளார். ஆட்டோவில் இருந்த பையை அந்த ஒட்டுனர் திறந்து பார்த்த போது அதில், 80 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது ஆட்டோவில் பயணம் செய்த அந்தப் பெண்ணை வீடுதேடிச் சென்று திருப்பிக் கொடுத்தார். உரியவரிடம் அந்தப் பணத்தை பத்திரமாக ஆட்டோ ஒட்டுனர் ஒப்படைத்ததை அடுத்து ஒட்டுனருக்கு பாராட்டு தெரிவித்தார்.இந்நிலையில் மற்றவர்களின் பணத்திற்கு ஆசைப்படாமல் தவறவிட்ட பணத்தை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முதியவர் ஆட்டோ ஓட்டுநருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.