தமிழ்நாடு

அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நெஞ்சுவலி!

webteam

அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப்.சி.ரெட்டிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போலோ மருத்துவக் குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நள்ளிரவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு, அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.