தற்காலிக முகாம்கள் அமைப்பு புதிய தலைமுறை
தமிழ்நாடு

கனமழை எதிரொலி.. பொதுமக்கள் தங்க தற்காலிக முகாம்கள் அமைப்பு

PT WEB

தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள எம்.வி.புரம். ப்ரைமரி மேல்நிலைப்பள்ளி மற்றும் மீனாட்சிபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல்லையில் கனமழை

இதேபோல் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள கல்லணை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்கேட் பள்ளி ஆகியவற்றிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் வந்து தங்கும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.