தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கட்டடங்களை ஆய்வுசெய்ய குழு - தா.மோ. அன்பரசன் அறிவிப்பு

Sinekadhara

குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்படும் கட்டடங்களின் தரத்தை ஆய்வுசெய்ய ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்திருக்கிறார்.

புளியந்தோப்பு குடியிருப்பின் கட்டுமான குறைபாடு பற்றி புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உட்பட அதிகாரிகள் அங்குசென்று ஆய்வு மேற்கொண்டதுடன் இதுகுறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்படும் கட்டடங்களின் தரத்தை ஆய்வுசெய்ய ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்திருக்கிறார்.