தமிழ்நாடு

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை உயர்த்த தமிழக அரசு பரிந்துரை

webteam

நெல் ஈரப்பத அளவை 17% லிருந்து 22% உயர்த்த மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் நெல் நனைந்து ஈரமாகினால், 17% ஈரப்பதம் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இதனால் அதிக பாதிப்பை சந்திப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஈரப்பத அளவு அதிகமாக இருந்தாலும் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் அதற்கு பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு முன்பாக ஈரப்பதத்தின் அளவு 22% வரை உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.