தமிழ்நாடு

அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைகள் - தமிழக அரசு நடவடிக்கை

Sinekadhara

அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டுப்புற கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டுசெல்லும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்கவேண்டும் எனவும், குறிப்பாக அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தனியார் நிறுவன பண்பாட்டு நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் நாட்டுப்புற கலைகளை ஒருபகுதியாக்க நடவடிக்கை எடுக்க தொழில் மற்றும் வணிக வரித்துறை ஆணையரகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.