தமிழ்நாடு

திடீரென உள்வாங்கிய வீட்டின் தரை தளம் - உயிர் தப்பிய தம்பதியினர்

திடீரென உள்வாங்கிய வீட்டின் தரை தளம் - உயிர் தப்பிய தம்பதியினர்

webteam

சென்னை அம்பத்தூரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் தரை தளம் திடீரென உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் தரைத்தளத்தில்  ஓய்வுபெற்ற எல்.ஐ.சி ஊழியர் சந்திரசேகர் அவர் குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் வழக்கம் போல் மாலை தங்கள் படுக்கையறையில் படுத்து இருந்தனர். அப்போது திடீரென படுக்கையறையின் தரை தளம் சுமார் 10 அடிக்கு உள்ளே சென்றது. இதில் அவர்கள் படுத்திருந்த கட்டிலுடன் இருவரும் உள்ளே சென்றனர்.இவர்களது அலறல் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் பள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். இதில் அதிஷ்டவசமாக இருவரும் சிறு காயங்கள் கூட இல்லமால் உயிர் தப்பினர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் காவல்துறையினர் கட்டிட பொறியாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பாதுகாப்பு கருதி மேல் தளத்தில் இருந்த மற்ற மூன்று குடும்பத்தினரையும் போலீசார் வெளியேற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு உருவாவதற்கு முன்பு படுக்கை அறை இருந்த இடத்தில் கிணறு இருந்ததாக கூறப்படுகிறது. அதனை முறையாக மூடாததால் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக பொறியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.