தமிழ்நாடு

மெரினாவில் கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்

webteam

மெரினாவில் கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே போலீசையும் மீறி கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் மெரினாவில் போராட காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக இளைஞர்கள் குற்றம் சாட்டினர்.