அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிக்கான பணியில் மாணவர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சிவகங்கை | அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகையை ஒட்டி, தூய்மை பணியில் மாணவர்கள்! #ShockingVideo

PT WEB

சிவகங்கையில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதையொட்டி நேற்று அந்த மைதானத்தை சுத்தம் செய்யும் பணி மற்றும் கம்பு ஊன்றும் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வரும் சில மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளனர் அங்கிருந்த அதிகாரிகள். மாவட்ட விளையாட்டு விடுதியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பதை அரசு பலமுறை வலியுறுத்தி வரும் போதிலும், அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகளில் மாணவர்களை அதிகாரிகள் ஈடுபடுத்தியது வேதனை அளிப்பதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.