Govt school pt desk
தமிழ்நாடு

சேலம் | "தலைமையாசிரியர் எங்களை தரக்குறைவாக பேசுகிறார்" - மாணவர்கள் பேசிய வீடியோ வைரல்!

webteam

செய்தியாளர்: R.ரவி

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியின் தலைமையாசிரியராக பணிபுரியும் திருமுருகவேல் என்பவர், மாணவ மாணவிகளை தகாத வார்த்தையில் பேசுவதாக மாணவ மாணவிகள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Students

அந்த வீடியோவில் பள்ளி தலைமையாசிரியர் தங்களை தகாத வார்த்தையில் பேசுவதாகவும், தலை, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்பதாகவும், கழுத்தைப் பிடித்து நெரிப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் திருமுருக வேலுவிடம் கேட்டபோது, யாரையும் நான் தரக்குறைவாக பேசவில்லை. குழந்தைகளிடம் யாராவது இப்படி பேசுவார்களா. வேண்டுமென்று என் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கபீர் அவர்களிடம் கேட்டபோது, இந்த வீடியோ தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை முடிவில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.