தமிழ்நாடு

மெரினாவை வளைத்தது போலீஸ்: 25 பேர் கைது

webteam

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில்‌ பேராட்டம் நடத்தும் நோக்கில் வந்ததாக 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மெரினாவிற்கு போராட்டம் நடத்தும் நோக்கில் வந்ததாக 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.