சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் அனுப்ப வேண்டும் என் தமிழக அரசை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில் பலர் சிக்கினர். ஆனால் பொன்.மாணிக்கவேல் விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதேவேளையில் தமிழக அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
Read Also -> மாணவர்கள் கடன் கேட்டால் மறுக்க தெரிகிறது - எஸ்.பி.ஐ வங்கியை வெளுத்து கட்டிய உயர்நீதிமன்றம்
இந்நிலையில், சிலைக் கடத்தல் குற்றங்களை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த பரிந்துரை தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதனுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளின் முக்கிய ஆவணங்களை இணைத்து அனுப்பவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது பரிந்துரைக் கடிதம் மட்டும் இருப்பதாகவும், அனைத்து ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பரிசீலிப்பதாகவும் மத்திய அரசு கூறியருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.