தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனையின் மாடியிலிருந்து விழுந்த இளம் மருத்துவர் உயிரிழப்பு: காரணம் என்ன?

webteam

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த மருத்துவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடுமலைப்பேட்டையை சேர்ந்த கண்ணன் (25) என்பவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் இன்று அதிகாலையில் மருத்துவ மாணவர் விடுதியின் பார்க்கிங் பகுதியில் கை, கால்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்.

தகவல் அறிந்து ஏழுகிணறு போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது அறையின் 3-வது மாடியில் இருந்து விழுந்து இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏழுகிணறு போலீசார் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்றிரவு 1.30 மணி வரை பணிபுரிந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.