தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

webteam

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். இன்று கரை திரும்பிய அவர்கள் தங்கள் மீது தாக்குதல் நடந்ததாக தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் இலங்கை கடற்படையினருக்கு அஞ்சி மீன்பிடிக்காமல் சுற்றி வந்ததாகவும், அதிகாலையில் கரை திரும்பிக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மீன்பிடி படகுகளை சேதப்படுத்தியதால், 30ஆயிரத்தில் இருந்து 75ஆயிரம் ரூபாய் வரை தங்களுக்க இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.